இந்த அறிவிப்பு, நேபாளம் அடிக்கடி செல்லும் சுற்றுலா பயணிகள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு பெரிய நிம்மதியை அளிக்கிறது. கடந்த ஒரு தசாப்தமாக, இந்திய ரூபாய் உயர்மதிப்பு நோட்டுகள் செல்லாது என்பதால், பயணிகள் பணமாற்றத்தில் சிரமம் அடைந்து வந்தனர். தற்போது அந்த தடையை நீக்கி, நேபாள அரசு முக்கிய தளர்வை அறிவித்துள்ளது. இதனால் இந்திய–நேபாள சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.