பல வங்கிகள் தங்கள் டெபிட் கார்டுகளுடன் இலவச விபத்து காப்பீட்டை வழங்குகின்றன, ஆனால் இது பலருக்குத் தெரிவதில்லை. உங்கள் கார்டின் வகை மற்றும் வங்கியின் விதிமுறைகளைப் பொறுத்து காப்பீட்டுத் தொகை மாறுபடும்.
நம் நாட்டில் பலர் டெபிட் கார்டை ஏடிஎம்மில் பணம் எடுக்க அல்லது ஷாப்பிங் செய்ய மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் பெரும்பாலான வங்கிகள் டெபிட் கார்டுடன் இலவச விபத்து காப்பீடு வழங்குகின்றன என்பதை பலருக்கும் தெரியாது. இந்த பாதுகாப்பு தானாக செயல்படாது; சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் காப்பீடு அமலாகும்.
25
தனிநபர் விபத்து காப்பீடு
எஸ்பிஐ, கோடக் மஹிந்திரா, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி போன்ற முன்னணி வங்கிகள் தனிநபர் விபத்து காப்பீடு (Personal Accident Cover) வழங்குகின்றன. இது பெரும்பாலும் குழு காப்பீடு (குரூப் பாலிசி) வடிவத்தில் இருக்கும். அதனால் ஒவ்வொரு கார்ட்டருக்கும் தனி பாலிசி எண் இருக்காது. இதில் விபத்து மரணம், நிரந்தர ஊனமுற்றல், விமான விபத்து பாதுகாப்பு, மோசடி பாதுகாப்பு போன்ற பலன்கள் இருக்கலாம்.
35
முக்கியமான நிபந்தனை
ஆனால் இந்த காப்பீட்டை பெற முக்கியமான நிபந்தனை, டெபிட் கார்டை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். சில வங்கிகள் கடந்த 60 அல்லது 90 நாட்களில் குறைந்தபட்ச POS அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றன. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாவிட்டால் காப்பீடு அமலாகாது.
அதனால் மின்சாரம், மொபைல் ரீசார்ஜ், பெட்ரோல் போன்ற சிறிய மாதாந்திர செலவுகளை டெபிட் கார்டு மூலம் செலுத்துவது நல்லது. கார்டின் வகையைப் பொறுத்து காப்பீட்டு தொகை மாறும். சாதாரண கார்டுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை; பிரீமியம் கார்டுகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கிடைக்கும்.
55
வங்கியில் சரிபார்ப்பது அவசியம்
கிளைம் செய்யும் போது, நாமினி குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியை தொடர்புகொண்டு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். எனவே உங்கள் டெபிட் கார்டுக்கு காப்பீடு உள்ளதா? நிபந்தனைகள் என்ன? முன்கூட்டியே வங்கியில் சரிபார்ப்பது மிக முக்கியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.