தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஏப்ரல் 2026 முதல் டோல் கட்டணத்தை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்தின்படி, பல்வேறு மாற்றங்கள் அமலாக உள்ளது என்று கூறப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் ரொக்கப் பணம் மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் நிறுத்தப்படலாம். ஏப்ரல் 1, 2026 முதல் நாடு முழுவதும் டிஜிட்டல் கட்டண முறையை முழுமையாக அமல்படுத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், டோல் கட்டணம் முழுவதும் பாஸ்டேக் அல்லது யுபிஐ வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.
25
தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய முறை
இந்த முயற்சியின் நோக்கம் டோல் வசூல் முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவது. மின்னணு டோல் வசூல் முறையின் பயன்களை மேலும் வலுப்படுத்தவும், டோல் பிளாசாக்களின் செயல்பாட்டை விரைவாகவும் துல்லியமாகவும் மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரொக்கப் பரிவர்த்தனைகள் குறையும்போது, வாகனங்கள் டோல் நுழைவாயில்களில் தாமதமின்றி செல்லும் வசதி அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
35
ஆர்எப்ஐடி தொழில்நுட்பம்
கடந்த சில ஆண்டுகளில் பாஸ்டேக் பயன்பாடு 98 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. ஆர்எப்ஐடி (RFID) தொழில்நுட்பத்துடன் செயல்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாகனங்களில் பொருத்தப்பட்டிருப்பதால், டோல் கட்டணம் தானாகவே கழிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வசூல் செயல்முறை வெளிப்படைத்தன்மை பெற்றுள்ளது.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போது யுபிஐ கட்டண வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் மொபைல் மூலம் உடனடி டிஜிட்டல் பரிவர்த்தனை செய்து டோல் கட்டணத்தை செலுத்தலாம். இது பணம் கையாளும் சிக்கல்களைக் குறைக்கிறது, விரைவான சேவையை வழங்குகிறது.
55
இரட்டிப்பு தொகை வசூலிக்கப்படும்
தற்போதைய விதிமுறைகளின்படி, பாஸ்டேக் இல்லாமல் ரொக்கமாக கட்டணம் செலுத்துவோரிடம் இரட்டிப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. யுபிஐ மூலம் செலுத்துவோருக்கு சாதாரண கட்டணத்தை விட 1.25 மடங்கு தொகை வசூலிக்கப்படுகிறது. இத்தகைய மாற்றங்கள் டோல் வசூலை முழுமையாக டிஜிட்டல் பாதைக்கு மாற்றும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.