இனி மின்சாதனங்களை வாங்கும்போது அதில் அச்சிடப்பட்டுள்ள ஸ்டார் ரேட்டிங் லேபிள்-ஐ கவனிப்பது கட்டாயமாகிறது. பொதுவாக 3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட சாதனங்கள் அதிக மின்சாரம் பயன்படுத்தும் நிலையில், 5 ஸ்டார் ரேட்டிங் கொண்டவை குறைந்த மின்சாரத்தில் அதிக திறன் அளிக்கும். இந்த எரிசக்தி திறன் லேபிளிங் முறையை ஜனவரி 1, 2026 முதல் கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான உத்தரவை Bureau of Energy Efficiency வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதியின் கீழ், வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஏசி, டிவி, டீப் ஃப்ரீசர், கூலிங் டவர்கள், சில்லர்கள், எல்பிஜி கேஸ் ஸ்டோவ், ஃப்ளோர் ஸ்டாண்டிங் ஏசி, கார்னர் ஏசி, சீலிங் ஏசி போன்ற பல பொருட்களுக்கு லேபிளிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில பொருட்களுக்கு மட்டுமே இந்த விதி இருந்தது, தற்போது மேலும் பல சாதனங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்திற்கு புதுப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தத்தில், இந்த புதிய விதி மின்சார சேமிப்பையும், நுகர்வோர் விழிப்புணர்வையும் அதிகரிக்கும் ஒரு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.