கோவிட் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத DA மற்றும் DR நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்தத் தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) நல்ல செய்தி வெளியாகி உள்ளது. விரைவில் பெரும் தொகை கிடைக்கும். DA மற்றும் நிலுவைத் தொகையை மத்திய அரசு அனுமதித்துள்ளது. கோவிட் (Covid) காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) நிலுவைத் தொகையை மத்திய அரசு அனுமதித்துள்ளது.
25
Central Government Employees
மத்திய அரசு ஊழியர்கள்
இதனால் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இப்போது மூன்று தவணைகளாக வங்கிக் கணக்கில் (Account) பணம் வரும். 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரையிலான மூன்று தவணைகளின் இந்த நிலுவைத் தொகை (Arrears) விரைவில் கிடைக்கும்.
35
DA Arrears Update
எவ்வளவு பணம் உயரும்?
இது குறித்து JCM செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், ‘ஊழியர்கள் கோவிட்-ன் போது அயராது உழைத்தனர். இது அவர்களின் உரிமை’ என்றார். இப்போது கேள்வி என்னவென்றால், 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை நிலுவையில் இருந்த பணம் எவ்வளவு? மொத்தம் எவ்வளவு பணம் (Money) ஊழியர்களுக்குக் கிடைக்கும்? என்பதை பார்க்கலாம்.
ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், நிலை 1 ஊழியர்கள் ₹11,880 முதல் ₹37,554 வரையிலும், நிலை 13-14 ஊழியர்கள் ₹1.44 லட்சம் முதல் ₹2.18 லட்சம் வரையிலும் பெறுவார்கள். ஓய்வூதியதாரர்களும் இந்த நிலுவைத் தொகையைப் பெறுவார்கள். விரைவில் பணம் கிடைக்கும். மூன்று தவணைகளாக நிலுவைத் தொகை (Arrears) வழங்கப்படும். விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் பெரும் தொகை வரும்.
55
Dearness Allowance Hike
எட்டாவது ஊதியக் குழு அப்டேட்
எட்டாவது ஊதியக் குழு (8th Pay Commission) அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்கு முன், 18 மாத நிலுவைத் தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும். 2026 ஜனவரியில் எட்டாவது ஊதியக் குழு (8th Pay Commission) அமைக்கப்படலாம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் உயரும். அதேபோல், ஓய்வூதியமும் பெருமளவில் உயரும்.