இந்த நிலையில், ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் 50% கட்டணம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக நாளை (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, நிதி அமைச்சகத்திற்கும் ரயில்வே அமைச்சகத்திற்கும் இடையே இது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இந்தச் சலுகை அங்கீகரிக்கப்பட்டால், கடந்த ஆறு ஆண்டுகளாக முழு கட்டணம் செலுத்தி வரும் முதியவர்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமையும்.
லோயர் பெர்த் சலுகை
ரயிலில் கட்டண சலுகை வழங்கப்படாவிட்டாலும் மூத்த குடிமக்களுக்கு ரயில்வே பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. ரயிலில் ஸ்லீப்பர், ஏசி 3 டயர் மற்றும் ஏசி 2 டயர் பெட்டிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் லோயர் பெர்த்கள் வழங்கப்படுகின்றன.
டிக்கெட் புக் செய்யும்போதே அவர்களுக்கு லோயர் பெர்த் வழங்கப்பட்டு விடும். ஒரு வேளை ரயில் புறப்பட்ட பிறகும் ஏதேனும் கீழ் பெர்த் காலியாக இருந்தால், அது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும்.