இருப்பினும், ஒரு முக்கியமான தேவை உள்ளது. அதாவது பயனர்கள் மோசடி நடந்த 10 நாட்களுக்குள் புகாரளிக்க வேண்டும் சூழ்நிலையைப் பொறுத்து, UPI பரிவர்த்தனை அறிக்கை, போலீஸ் அறிக்கையின் நகல் அல்லது FIR, உரிமைகோரல் படிவம் மற்றும் UPI கணக்கைத் தடுப்பதற்கான ஆதாரம் போன்ற சில ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருக்கும். மோசடியின் தன்மையைப் பொறுத்து கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம்.
இன்றைய உலகில், டிஜிட்டல் பேபெமெண்ட்கள் என்பஹு அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட நிலையில், ஷீல்ட் போன்ற முன்முயற்சிகள் மிகவும் அவசியமான பாதுகாப்பு அம்சமாக கருதப்படுகிறது.. இந்தச் சேவை மதிப்புமிக்க பாதுகாப்பை வழங்கினாலும், பயனர்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். அறியப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்வதையோ, சரிபார்க்கப்படாத மூலங்களிலிருந்து ஆப்ஸைப் பதிவிறக்குவதையோ அல்லது அந்நியர்களுடன் முக்கியமான கட்டணத் தகவலைப் பகிர்வதையோ தவிர்க்கவும்.