இந்த நிலையில் கடைசி நேரத்தில் வங்கி ஊழியர் சங்கங்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளன. திட்டமிடப்பட்டிருந்த இரண்டு நாள் வங்கி வேலைநிறுத்தத்தை அவர்கள் ஒத்திவைத்துள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறை, வேலைநிறுத்தம் மற்றும் பண்டிகைகள் காரணமாக மே 23 முதல் 28 வரை, ஆறு நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என கூறப்பட்டது. ஆனால், வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதால் மே 25, 26 தேதிகளில் வங்கிகள் திறந்திருக்கும்.
வங்கி ஊழியர்களின் கோரிக்கை என்ன?
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் இந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்துள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும், வங்கிச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும். வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி சங்கங்கள் இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. மத்திய அரசு அலுவலகங்கள், ஆர்பிஐ, எல்ஐசி, ஜிஐசி மற்றும் பங்குச் சந்தை போல வங்கிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.