ஏப்ரல் 1 முதல் விமான டிக்கெட் விலை உயருமா? விமான பயணிகளுக்கு எச்சரிக்கை

Published : Mar 22, 2026, 12:36 PM IST

ஏப்ரல் 1 முதல் மத்திய கிழக்கு பதற்றங்களால் விமான எரிபொருள் விலை உயர்கிறது. இதனால், ஏர் இந்தியா மற்றும் ஆகாசா ஏர் போன்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் விதிக்கத் தொடங்கியுள்ளன.

PREV
15
விமான டிக்கெட் விலை உயர்வு

ஏப்ரல் 1 முதல் விமான எரிபொருள் (ATF) விலை உயர்வின் தாக்கம் தெளிவாகப் பிரதிபலிக்கும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில்தான் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுவதால், புதிய உயர்வு அடுத்த மாத தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும் என அவர் விளக்கினார். இதனால் விமான சேவைகளில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

25
விமான எரிபொருள் விலை

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் பதற்றம் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும், பயணிகளின் பாதுகாப்பு, விமான சேவையின் தொடர்ச்சி முதன்மை என அரசு வலியுறுத்தியுள்ளது. விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் பெட்ரோலியம் அமைச்சகங்கள் இணைந்து நிலையை கண்காணித்து வருவதாகவும், சேவையை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

35
எரிபொருள் கூடுதல் கட்டணம்

இந்த நிலையில், சில விமான நிறுவனங்கள் ஏற்கனவே எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. ஏர் இந்தியா உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் படிப்படியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், ஆகாசா ஏர் மார்ச் 15 முதல் புதிய முன்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணத்தை அறிவித்துள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும் மேற்கு ஆசிய மோதல்கள் இதற்கு காரணமாக உள்ளன.

45
மத்திய பெட்ரோலியம் அமைச்சர் பதில்

இந்நிலையில், எரிபொருள் பற்றாக்குறை குறித்த அச்சங்களை அரசு மறுத்துள்ளது. மத்திய பெட்ரோலியம் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நாட்டில் தேவையான அளவில் எரிசக்தி இருப்பு இருப்பதாகவும், நீண்டகால மோதல்களையும் சமாளிக்க முடியும் என்றும் கூறினார். அனைத்து துறைகளுக்கும் தேவையான எரிபொருள் இருக்காது மற்றும் மின்சாரம் கிடைப்பதில் பிரச்சனை என அவர் உறுதியளித்தார்.

55
மத்திய அரசு விளக்கம்

மேலும், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் உள்ளிட்ட எந்த எரிசக்தி பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. சுத்திகரிப்பு ஆலைகள் முழுத் திறனுடன் வருவதால் விநியோகம் பாதிக்கப்படாது. எனவே, விலை உயர்வு இருந்தாலும், சேவை தொடர்ச்சியும் எரிபொருள் கிடைப்பதும் பாதுகாப்பாக இருக்கும் என அரசு நம்பிக்கை அளித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories