Published : May 28, 2026, 10:38 PM ISTUpdated : May 28, 2026, 10:39 PM IST
ATM: நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போதும் பணம் வரவில்லை. ஆனால் அக்கவுண்ட்டில் டெபிட் ஆகிவிட்டதா? இதற்காக பேங்க் உங்களுக்கு ரூ.100 தினமும் அபராதமாக தர வேண்டும் தெரியுமா? இது குறித்து விரிவாக பார்ப்போம்.
லோனை முன்கூட்டியே அடைக்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். ஆர்சிபிஐ புதிய விதிகளின்படி பெர்சனல் லோன், வீட்டுக்கடன், கார் லோன், கல்விக் கடன் போன்றவற்றை முன்கூட்டியே அடைத்தால், வங்கிகளோ அல்லது NBFC-களோ எந்தவிதமான அபராதமும் வசூலிக்க கூடாது என்று RBI தடை விதித்துள்ளது. முன்னெல்லாம், இப்படி லோனை முன்கூட்டியே அடைத்தால் 2% முதல் 4% வரை அபராதம் விதித்தார்கள். இந்த புதிய விதியால் வாடிக்கையாளர்கள் கடனை சீக்கிரம் அடைச்சு, வட்டிச் சுமையைக் குறைக்க முடியும்.
ஏடிஎம்மில் டெக்னிக்கல் கோளாறு காரணமாக பணம் எடுக்க முயற்சிக்கும்போது, பணம் வராமல் ஆனால் அக்கவுன்ட்டில் இருந்து பணம் டெபிட் ஆகிடும். முன்னெல்லாம், இந்தப் பணத்தைத் திரும்பப் பெற பல நாட்கள் ஆகும். ஆனா இப்போது RBI விதிகளைக் கடுமையாக்கி உள்ளது. சம்பந்தப்பட்ட வங்கி 5 வேலை நாட்களுக்குள் பணத்தைத் திரும்ப வாடிக்கையாளர் கணக்கில் செலுத்தணும். அப்படி 5 நாட்களுக்குள் பணம் வரவில்லை என்றால் வங்கி ஒவ்வொரு நாளுக்கும் ₹100 வீதம் வாடிக்கையாளருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.
24
பாதுகாப்பு அம்சங்கள் அப்டேட்
சிம் ஸ்வாப், ஃபிஷிங் போன்ற டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதைத் தடுக்க, ஏப்ரல் 2026 முதல் பாதுகாப்பு அம்சங்கள் அப்டேட் செய்யப்படுகிறது. பெரிய மற்றும் அதிக மதிப்புள்ள டிரான்சாக்ஷன்களுக்கு, வெறும் SMS OTP-ஐ மட்டும் நம்பாம; பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன், ஃபேஸ் ஐடி, ஆப்-அடிப்படையிலான அப்ரூவல் டோக்கன் போன்ற நவீன பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்த RBI ஊக்குவிக்கிறது.
34
அக்கவுன்ட்டில் மினிமம் பேலன்ஸ் இல்லையா?
அக்கவுன்ட்டில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் வங்கிகள் கண்டபடி மறைமுக அபராதங்களை விதிச்சுட்டு இருந்தார்கள். இப்போது RBI இதுக்கு ஒரு கடிவாளம் போட்டுள்ளது. இனிமேல், அபராதக் கட்டணங்கள் வெளிப்படையாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்று RBI தெளிவாக உத்தரவு போட்டுள்ளது. சட்டவிரோத மற்றும் அங்கீகரிக்கப்படாத லோன் ஆப்களுக்கு RBI இப்போது செக் வைத்துள்ளது. டிஜிட்டல் கடன் வழிகாட்டுதல்களின்படி, எந்த லோன் ஆப்பும் கடன் கொடுக்குற சாக்கில் வாடிக்கையாளரின் பர்சனல் கான்டாக்ட்ஸ், கேலரி, போட்டோஸ், கால் லாக்ஸ் போன்றவற்றை வலுக்கட்டாயமாக யூஸ் பண்ண முடியாது.
ரிகவரி ஏஜென்ட்கள் உறவினர்களுக்கு போன் பண்றது, பொதுவெளியில் அவமானப்படுத்துறது போன்ற தொல்லைகளைத் தடுக்க, வாடிக்கையாளரின் சம்மதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. RBI விதிகள் சம்பந்தமாக நிறைய போலி செய்திகள், லிங்குகள் சமூக வலைதளங்கள்ல பரவும். எந்த ஒரு செய்தியையும் நம்புறதுக்கு முன்னாடி, அல்லது ஒரு லிங்கை கிளிக் பண்றதுக்கு முன்னாடி, RBI-யோட அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் போய் தகவலைச் சரிபார்த்து கொள்ளுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.