மோசடி:
உங்கள் கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் செருகும் முன் ஸ்லாட்டைச் சரிபார்ப்பது நல்லது. ஏனெனில் சில நேரங்களில் மோசடி கும்பல் ஏடிஎம் ஸ்லாட்டில் ஸ்கிம்மரை பொருத்தி இருக்கலாம். இது காந்தப் பட்டையிலிருந்து உங்கள் எல்லா தரவையும் படிக்கும். திருடப்பட்ட தகவல்கள் உங்கள் கார்டை 'க்ளோன்' செய்ய பயன்படுத்தப்பட்டு, உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம்.
உங்கள் பணத்தை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும்?
வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளவும்
ஏடிஎம் பணம் வராமல், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்தால் உடனடியாக வங்கியின் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை ஹெல்ப்லைனை அழைக்க வேண்டும். உங்கள் சிக்கலைக் குறிப்பெடுத்து, உங்கள் பரிவர்த்தனை குறிப்பு எண்ணைப் பதிவுசெய்த பிறகு, நிர்வாகி உங்கள் புகாரைப் பதிவுசெய்து, புகார் கண்காணிப்பு எண்ணை உங்களுக்கு வழங்குவார்.
பின்னர் இந்த விவகாரம் விசாரிக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) படி, அவ்வாறு கழிக்கப்படும் எந்தத் தொகையும் புகார் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். இல்லையெனில், தாமதத்திற்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும்.