இந்த புதிய அப்டேட் தொலைதூரங்களில் வசிப்பவர்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள் பராமரிப்பில் பிஸியாக இருக்கும் பெண்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் வெளியே செல்ல முடியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயணச் செலவு, நேரம் மற்றும் வரிசையில் நிற்கும் சிரமம் இனி இல்லை.
- முதலில் mAadhaar செயலியை பதிவிறக்கவும்.
- 'Update Mobile Number' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஆதார் எண் & புதிய மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- வந்த OTP-ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும்.
- முக அங்கீகாரம் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- பொருந்தியவுடன், எண் ஆதாரில் புதுப்பிக்கப்படும்.
பழைய முறையில், மையத்திற்குச் சென்று, படிவத்தை நிரப்பி, வரிசையில் நின்று, கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு சில நாட்கள் ஆகும். ஆனால் புதிய முறையில் சில நிமிடங்களில் எண் புதுப்பிக்கப்படும். பயணச் செலவு, வரிசை இல்லை. முக அங்கீகாரம் பாதுகாப்பை அதிகரிக்கிறது.