இதற்கிடையில் UIDAI, புதிய ஆதார் ஆப் விரைவில் அறிமுகமாகும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போதைய mAadhaar செயலிக்கு பதிலாக வரும் இந்த புதிய செயலியில் QR அடிப்படையிலான ஆதார் பகிர்வு, மேம்பட்ட தனியுரிமை அமைப்புகள் மற்றும் வேகமான அணுகல் போன்ற ஸ்மார்ட் வசதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நிபுணர்கள் கூறுவதன்படி, வங்கி கணக்கு, பான் இணைப்பு, சிம் சரிபார்ப்பு மற்றும் அரசு சேவைகளில் ஆதார் முக்கிய பங்கு வகிப்பதால், மக்கள் தங்களது விவரங்களை சரிபார்த்து தேவையான மேம்படுத்தல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது இலவச சேவை நீட்டிக்கப்பட்டிருப்பதால், இதை பயன்படுத்த நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.