8வது ஊதியக் குழு, 2026 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் முக்கிய நகரங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுடன் புதிய கூட்டங்களை நடத்த உள்ளது. சம்பளக் கட்டமைப்பு தொடர்பான கோரிக்கைகளைப் பற்றி விவாதிப்பதே இந்தக் கூட்டங்களின் முக்கிய நோக்கம்
8வது ஊதியக் குழு, நாடு தழுவிய ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக, 2026 செப்டம்பரில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுடன் புதிய கூட்டங்களை நடத்த உள்ளது.
28
தமிழ்நாட்டில் கூட்டம் நடக்குதா?!
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இந்த ஆணையம், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களின் ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் கேட்க உள்ளது. ஜெய்ப்பூர், சென்னை, புதுச்சேரி மற்றும் சண்டிகரில் இந்தக் கூட்டங்கள் நடைபெறும்.
38
சென்னையில் எப்போ மீட்டிங்?
ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) - ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1, 2026 (திங்கள் & செவ்வாய்)
சென்னை (தமிழ்நாடு) - செப்டம்பர் 7 மற்றும் 8, 2026 (திங்கள் & செவ்வாய்)
புதுச்சேரி - செப்டம்பர் 9, 2026
சண்டிகர் - செப்டம்பர் 16 முதல் 18, 2026
பெங்களூரு - அக்டோபர் 7 மற்றும் 8, 2026 (சமீபத்திய அறிவிப்பு)
ரயில்வே ஊழியர்களின் பணிச்சூழல் குறித்த தகவல்களைச் சேகரிக்க, மும்பையில் உள்ள மத்திய ரயில்வே மண்டலத்தின் கீழ் வரும் ரயில்வே கோட்டங்களைப் பார்வையிடவும் இந்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.
58
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி
ஜெய்ப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி கூட்டங்களில் பங்கேற்பதற்கான விண்ணப்ப தேதி ஆகஸ்ட் 18, 2026 உடன் முடிவடைந்தது. சண்டிகரில் நடைபெறும் கூட்டங்களுக்குப் பிரதிநிதிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 25, 2026 ஆகும்.
68
கோரிக்கைகளை வெளிப்படுத்த சூப்ப் சான்ஸ்
சம்பளம், படிகள், ஓய்வூதியம் மற்றும் பிற பணி நிபந்தனைகள் குறித்த தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்த ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுக்கு இந்த கூட்டங்கள் ஒரு வாய்ப்பை வழங்கும்.
78
விவாதப் பொருள் இதுதான்
கூட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பு, படிகள், குறைந்தபட்ச ஊதியம், ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் ஓய்வூதிய திருத்தம் போன்றவையே முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.
88
ஊழியர் சங்கங்கள் கோரிக்கை
8வது ஊதியக் குழுவின் கீழ் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57-லிருந்து 3.83 ஆகவும், பின்னர் 4.0 ஆகவும் உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதில் அரசு எதை ஏற்கும் என மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.