மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்.. மார்ச் 16 வரை முக்கிய வாய்ப்பு!

Published : Feb 14, 2026, 12:34 PM IST

மத்திய அரசின் 8வது ஊதியக் குழுவின் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இந்த குழு ஊதிய கட்டமைப்பு, அலவன்ஸ் மற்றும் ஓய்வூதிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து 18 மாதங்களில் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.

PREV
14
8வது ஊதியக் குழு முக்கிய அப்டேட்

மத்திய அரசின் 8வது ஊதியக்குழு பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடமிருந்து கருத்துகளை பெற ஆன்லைன் தளம் தொடங்கப்பட்டுள்ளது.

24
மத்திய அரசு ஊழியர் ஊதியம்

2025 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட இந்த குழு, நவம்பர் 3ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது. 18 மாதங்களில் இறுதி பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

34
ஓய்வூதிய மாற்றம்

ஊதிய கட்டமைப்பு, அலவன்ஸ், ஓய்வூதிய மாற்றங்கள் போன்றவை ஆய்வில் உள்ளன. பொருளாதார நிலை மற்றும் அரசு நிதிநிலை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும்.

44
ஊதிய திருத்தம்

மார்ச் 16, 2026 வரை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகளை பகிரலாம். இது எதிர்கால வருமான அமைப்பை தீர்மானிக்க முக்கியமான வாய்ப்பு. இந்த குழுவின் பரிந்துரைகள் லட்சக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், அனைவரும் கவனமாக எதிர்பார்த்து வருகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories