உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் கூட்டம் அலைமோதும். பெருமாளை தரிசனம் செய்யவே கிட்டத்தட்ட சுமார் 18 மணிநேரம் ஆகிவிடும்.
25
திருமலையில் அனந்த் அம்பானி
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலையில் திருமலைக்கு வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் டைரக்டர் அனந்த் அம்பானி, சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டார். பின்னர் தலைமுடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செய்தார். தரிசனத்திற்குப் பிறகு, கோயில் நிர்வாகிகள் அவருக்கு பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தனர்.
35
ரூ.27.50 கோடி மதிப்பில் 25 மின் பேருந்துகள்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.27.50 கோடி மதிப்பில் 25 அதிநவீன எலக்ட்ரிக் பேருந்துகளை நன்கொடையாக அறிவித்தார். இது திருமலையில் ஒரு பசுமைப் புரட்சிக்கு வழிவகுக்கும்.
அனந்த் அம்பானி பேருந்துகளை மட்டும் கொடுக்கவில்லை. அந்த 25 பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை தானே ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளார். மேலும், திருமலையில் ஒரு ஹை-டெக் EV சார்ஜிங் ஸ்டேஷனையும் அமைத்து கொடுக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகளிடம் அனந்த் அம்பானி தெரிவித்தார்.
55
கோசாலை நவீன வசதிகளுடன் மேம்படுத்துதல்
விலங்குகள் மீது அதிக பிரியம் கொண்டவர் அனந்த் அம்பானி. குஜராத்தில் அவர் உருவாக்கிய 'வந்தாரா' விலங்குகள் மறுவாழ்வு மையம் உலகப் புகழ்பெற்றது. அதே பாணியில், திருமலையில் உள்ள TTD கோசாலையையும் நவீன வசதிகளுடன் மேம்படுத்த அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.