நாட்டில் கார் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை அடைகிறது. பெட்ரோல், டீசல் கார்கள் அதிகளவில் விற்கப்பட்டாலும், எலக்ட்ரிக் கார்களின் விற்பனையும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் பெட்ரோல் கார்களின் பயன்பாடு குறைந்து, எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. மலிவு விலை, எளிதான கையாளுதல், குறைந்த பராமரிப்புச் செலவு ஆகியவை முக்கிய காரணங்கள்.
டாடா பஞ்ச் இவி, டாடா டியாகோ இவி, டாடா நெக்ஸான் இவி, எம்ஜி காமெட் இவி மற்றும் சிட்ரோன் இசி3 ஆகியவை பிரபலமான எலக்ட்ரிக் கார்கள். இவை விலை குறைந்தது மட்டுமல்ல, தினசரி நகரப் பயன்பாட்டிற்கும் ஏற்றவை.