மத்திய அரசே தருது.. ரூ.10000 மானியம்.. புது ஸ்கூட்டர் வாங்குங்க.. செப்டம்பர் 30 கடைசி தேதி!!

Published : Aug 31, 2024, 08:53 AM IST

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஏத்தர், ஓலா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் வாகனங்கள் மானியத்திற்கு தகுதி பெற்றுள்ளன. எனவே, மின்சார வாகனங்கள் வாங்க விரும்புபவர்கள் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

PREV
14
மத்திய அரசே தருது.. ரூ.10000 மானியம்.. புது ஸ்கூட்டர் வாங்குங்க.. செப்டம்பர் 30 கடைசி தேதி!!
EV Subsidy

கனரக தொழில்துறை அமைச்சகத்தின் எலக்ட்ரிக் மொபிலிட்டி புரமோஷன் திட்டம் (இஎம்பிஎஸ்) செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியமும் நிறுத்தப்பட உள்ளது. அதற்கு பிறகு அவற்றை வாங்குவது விலை உயர்ந்ததாகவே இருக்கும்.

24
EV Scooter

எனவே வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு இதுவே கடைசி மாதமாகும். இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் சில பிரீமியம் மின்சார இரு சக்கர வாகனங்கள் EMPSக்கு தகுதியுடையவை. இந்த பட்டியலில் ஏத்தர் 450எக்ஸ், ஏதர் ரிஸ்ட்டா, ஓலா எஸ்1 ப்ரோ, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேடக், விடா வி1 ப்ரோ ஆகியவை அடங்கும்.

34
Electric Mobility Promotion Scheme

MPS இன் ஒரு பகுதியாக, மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ரூ.778 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 500,080 மானிய விலையிலான மின்சார வாகனங்களும் அடங்கும். இந்த திட்டம் மீண்டும் தொடர்ந்து செயல்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

44
EMPS 2024

இந்த திட்டத்தின் காரணமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்களின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10,000 மானியம் கிடைக்கும். எனவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செப்டம்பர் 30க்குள் வாங்குவது சிறந்தது ஆகும்.

ஹோண்டா ஆக்டிவா vs டிவிஎஸ் ஜூபிடர்: அதிக மைலேஜ்.. பெரிய ஸ்டோரேஜ் - எந்த ஸ்கூட்டர் சிறந்தது?

Read more Photos on
click me!

Recommended Stories