இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பயணிகள் போக்குவரத்து பிரிவிலும் புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அந்த வரிசையில் தனது, பியாக்ஜியோ நிறுவனம் புதிய எப் வேவ் மின்சார மூன்று சக்கர பயணிகள் வாகனத்தை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஏப் வேவ், பயணிகளுக்கான மின்சார மூன்று சக்கர வாகனப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதன் அறிமுக விலை ரூ.2.55 லட்சம் (தொழிற்சாலை விலை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துக்காக இந்த வாகனம், ஆட்டோ ஓட்டுநர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் 5.4 கிலோவாட் மணி திறன் கொண்ட மின்கலத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. நகரப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் ஆகும். ஒருமுறை முழுமையாக மின்னேற்றம் செய்தால் 90 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 4.5 மணி நேரம் தேவை.
இதனால் நீண்ட காலம் உறுதியுடன் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 19 சதவீத ஏற்றத் திறன் இருப்பதால் மேடு, பள்ளம் மற்றும் சாய்வான சாலைகளிலும் எளிதாக இயக்க முடியும்.
ரூ.3.49 லட்சம் தான் விலை.. நல்ல மைலேஜ்.. நடுத்தர குடும்பங்களுக்கு சூப்பர் கார் இதுதான்