சாலையில் அடிக்கடி காணப்படும் ஒரு பொதுவான தவறு தான் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் அடிக்கடி பயணம் செய்வது. இதை பலர் சாதாரண விஷயமாக நினைத்தாலும், இது சட்டவிரோதம் மட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தான செயலாகவும் கருதப்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறி டிரிபிள் ரைடிங் செய்தால், போலீசார் உடனடியாக அபராதம் விதிப்பார்கள்.
மோட்டார் வாகனச் சட்டம் விதிகளின்படி, இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் உட்பட அதிகபட்சம் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி உள்ளது. இதை மீறி மூன்று பேர் சென்றால், அது சட்டபூர்வ குற்றமாகும். குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில், இந்த விதி கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.
டெல்லி போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, டிரிபிள் ரைடிங் குற்றத்திற்கு மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 194C-ன் கீழ் அபராதம் விதிக்கப்படுகிறது. முதல் முறையாக பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அதே தவறை மீண்டும் செய்தால், ஒவ்வொரு முறையும் ரூ.1,000 அபராதம் தொடர்ச்சியாக விதிக்கப்படும்.