அரசின் EV சார்ஜிங் நிலைய விரிவாக்கத் திட்டம்
இந்திய அரசாங்கம் இப்போது முக்கிய பொது இடங்களில் மின்சார வாகன (EV) சார்ஜிங் வசதிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதில் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் முதன்முறையாக துறைமுகங்களும் அடங்கும். இதற்காக, 2,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியை, அரசு ஒதுக்கியுள்ளது. அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 2025-26 ஆம் ஆண்டிற்குள் பொது EV சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை 32,500 லிருந்து 72,300 ஆக உயர்த்த அரசு இலக்கு வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களுடன், பேட்டரி மாற்றும் சேவைகளும் வழங்கப்படும்.
நாட்டிலேயே இது தான் விலை கம்மி? முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கும் Vifast VF3