Newborn Horoscope: குழந்தைகள் பிறந்த உடன் ஜாதகம் எழுதலாமா? எந்த வயதில் ஜாதகம் கணிக்கலாம்? என பலருக்கும் சந்தேகம் உள்ளது. இதற்கு ஜோதிட நிபுணர்கள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர். வாங்க செய்தியில் பார்க்கலாம்.
இந்து பாரம்பரியத்தில் ஒருவரின் ஜாதகம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு குழந்தை பிறக்கும் துல்லியமான தருணத்தில், விண்வெளியில் நவகிரகங்கள் எந்தெந்த ராசிகளிலும் வீடுகளிலும் சஞ்சரிக்கின்றன என்பதை அடிப்படையாக கொண்டு ஜாதகம் கணிக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி ஜாதகம் என்பது ஒருவரின் குணநலன், ஆரோக்கியம், கல்வி, தொழில், வாழ்க்கைத்துணை மற்றும் எதிர்கால வாழ்க்கைப் பயணத்தை துல்லியமாக அறிந்து கொள்ள உதவுகிறது என நம்பப்படுகிறது.
ஆனாலலும் குழந்தைப் பிறந்தவுடன் ஜாதகம் கணிக்கலாமா? குழந்தைகளுக்கான ஜாதக பலன்களை எப்போது கேட்க வேண்டும்? என்பது குறித்தும் பலரிடம் குழப்பம் நீடித்து வருகிறது. இதுகுறித்து பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி உள்பட ஜோதிட ஆர்வலர்கள் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்.
24
ஜாதகம் எழுத சரியான வயது எது?
ஜோதிட நிபுணர்களின் கருத்துப்படி, உங்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக குழந்தை பிறந்தவுடனேயே ஜாதகம் எழுதும் பழக்கம் இருந்தால், அதை அப்படியே தொடர்ந்து பின்பற்றுவது நல்லது. முன்னோர்களின் வழிமுறையை மாற்ற வேண்டியதில்லை.
அதே வேளையில் குடும்பத்தில் குறிப்பிட்ட வழக்கங்கள் எதுவும் இல்லாதவர்கள், ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, குழந்தை பிறந்து 1 ஆண்டு முழுமையாக நிறைவடைந்த பிறகே ஜாதகம் எழுத வேண்டும்.
34
குழந்தைகளுக்கான பலன்கள் எப்போது பார்க்க வேண்டும்?
ஒரு குழந்தைக்கு ஜாதகம் எழுதிய உடனடியாக ஜோதிடரிடம் சென்று எதிர்கால பலன்களைக் கேட்கக் கூடாது. சிறு குழந்தைகளின் செயல்பாடுகள் அனைத்தும் இறைவனின் சங்கல்பப்படி நடப்பதால், அவர்களுக்கு 12 வயது வரை பலன் பார்க்கத் தேவையில்லை.
12 வயதிற்குள் குழந்தைக்குத் தொடர்ச்சியான உடல்நலக் குறைபாடு, தீவிர நோய் பாதிப்புகள் அல்லது கல்வியில் கடுமையான கவனச்சிதறல் போன்ற ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் மட்டுமே ஜோதிட ஆலோசனையைப் பெறலாம். மற்றபடி 12 வயது வரை குழந்தைகளுக்கு ஜோதிட பலன்களை பார்க்க அவசியமில்லை.
உங்கள் குழந்தையின் 12 வயதிற்கு மேல் உயர் கல்வி, வெளிநாட்டுப் பயணம் அல்லது அவசியமான தேவைகள் எழும் தருணங்களில் மட்டும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
பெண் குழந்தைகளுக்கு 1 வயது முடிந்ததும் ஜாதகம் கணித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பூப்படையும் பருவம் வரை பலன்கள் பார்க்க வேண்டியதில்லை. ஆனால், அவர்கள் பூப்படையும் துல்லியமான நேரத்தைக் குறித்து வைத்து, "ருது ஜாதகம்" கணிப்பது முக்கியம். எதிர்காலத்தில் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது மணமகன் வீட்டார் இதைக் கேட்க வாய்ப்புள்ளது என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒட்டுமொத்ததில் தெளிவாக சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் குழந்தைகளுக்கு ஜாதகம் கணித்த பின் அதை வீட்டில் உள்ள பூஜை அறையிலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ வைத்துவிட வேண்டும். மேலே குறிப்பிட்ட அவசியத் தேவைகளோ அல்லது உடல்நலப் பிரச்சனைகளோ இல்லாத பட்சத்தில், திருமணத்தின் போது பொருத்தம் பார்ப்பதற்காக மட்டுமே ஜாதகத்தை வெளியே எடுப்பது சிறந்தது.