4. மயில் இறகுகள்: மயில் இறகுகள் லட்சுமி தேவி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற்றுத் தரும். இவை வீட்டில் உள்ள ராகு தோஷங்களையும், நிதி சிக்கல்களையும் நீக்க உதவுகின்றன. வீட்டின் தென்கிழக்கு அல்லது ஆக்னேய மூலையில் மயில் இறகுகளை வைத்தால், பண ஈர்ப்பு அதிகரிக்கும். பூஜை அறையில் வைத்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
5. கிரிஸ்டல் பிரமிட்: ஸ்படிகம் அல்லது கிரிஸ்டல்கள், தன்னைச் சுற்றியுள்ள ஆற்றலைச் அதிகம் செய்து, பாசிட்டிவ் எனர்ஜியைப் பரப்பும். குடும்ப உறுப்பினர்களிடையே உறவுகளை மேம்படுத்தவும், குழந்தைகளின் கவனத்தை அதிகரிக்கவும், நெகட்டிவிட்டியை அகற்றவும் கிரிஸ்டல் பிரமிட் உதவுகிறது. இதை ஹாலின் ஈசானிய அல்லது வடக்கு திசையில் வைக்கலாம்.
6. குபேர யந்திரம் / லட்சுமி யந்திரம்: செல்வத்தின் அதிபதியான குபேரரின் அருளைப் பெற இந்த யந்திரத்தை வீட்டில் வைப்பார்கள். வடக்கு திசை பணத்திற்கு உரிய திசை என்பதால், குபேர யந்திரத்தை பூஜை அறையின் வடக்குச் சுவரில் அல்லது பீரோ லாக்கரில் வைத்தால், பண வரவு தடையின்றி இருக்கும்.
7. மூங்கில் செடி, புல்லாங்குழல்: மஞ்சள் அல்லது சிவப்பு நூலால் கட்டப்பட்ட இரண்டு மூங்கில் புல்லாங்குழல்களை பிரதான வாசலின் மேலே வைத்தால், அது லட்சுமி தேவியை வீட்டிற்குள் வரவேற்பது போலாகும். அதேபோல, வீட்டில் ஒரு சிறிய லக்கி பேம்பூ (Lucky Bamboo) செடியை வளர்ப்பது செழிப்பைக் கொடுக்கும்.