Tiruttani Aadi Krithigai 2026: திருத்தணி முருகன் கோயிலில் அன்னதானம் வழங்க போறீங்களா? அனுமதி பெறுவது எப்படி? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

Published : Jul 17, 2026, 07:48 AM IST

Annadanam Permission: ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல முருகருக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. ஆடி மாதத்தில் கிருத்திகை, சஷ்டியும் மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக, ஆடிக்கிருத்திகை நாளில் முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

PREV
15

ஆடி மாதம் முழுவதுமே அம்மன் வழிபாட்டிற்குரிய வழிபாட்டு மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்தில் மாரியம்மன், காளியம்மன் மற்றும் துர்க்கை அம்மன் கோவில்களில் திருவிழாக்களும், சிறப்பு வழிபாடுகளும் விமரிசையாக நடைபெறும். அதுமட்டுமல்ல தமிழ் கடவுளான முருகருக்கு உகந்த மாதம். அதாவது கிருத்திகை, சஷ்டியும் மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக, ஆடிக்கிருத்திகை நாளில் முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

25

இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா ஆகஸ்ட் 04 முதல் 08ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடிக்கிருத்திகை திருவிழாவில் அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.

35

அன்னதானம் வழங்க விரும்புவோர் ஜூலை 18 முதல் 28ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மேலே குறிப்பிட்ட இணையதளத்தில் சமர்பித்து அனுமதி பெறவேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கிகரிக்கப்பட்ட சான்றின் நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோர்கள் தங்களை சார்ந்த அன்னதானம் விநியோகிப்பவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை தகவலுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

45

(தகவலுக்கு இணை ஆணையர் /செயல் அலுவலர், தலைமை அலுவலகம், அரக்கோணம் சாலை, திருத்தணி அவர்களை அணுகவும்) எக்காரணத்தை கொண்டும் ஜூலை 30 தேதிக்கு பின்னர் விண்ணப்பம் பெறப்பட மாட்டாது. அன்னதானம் வழங்குபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடம், அனுமதி பெறப்பட்ட நாள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது. பக்கதர்களுக்கு இடையூறு இல்லாமல் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்க கூடாது. உணவு பொருட்கள் கலப்படம் இல்லாமல் தரமானதாகவும், தூய்மையானதாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.

55

அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்கக்கூடாது. பிளாஸ்டிக் டம்ளர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யக்கூடாது. உணவு கழிவு பொருட்களை சேகரிப்பதற்கு ஏதுவாக குப்பைப்தொட்டிகளை வைத்து அதில் உணவு கழிவுகளை சேகரித்து, அன்னதானம் அளிப்பவர்களே சேகரித்த உணவு கழிவுகளை அவ்வப்போது அகற்றுவதுடன் அன்னதானம் வழங்கிய இடத்தையும் சுத்தம் செய்துவிட்டு செல்ல வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க இயலாது. மேலும் போதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அன்னதானம் வழங்குவது தொடர்பாக 9489279217, 9578726302 ஆகிய இந்த இரண்டு எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories