Oct 23 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.! சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.!

Published : Oct 22, 2025, 05:35 PM IST

Today Rasi Palan : அக்டோபர் 23, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
அக்டோபர் 23, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் பேச்சில் வசீகரமும், ஆளுமையும் அதிகரிக்கும். உங்களுடைய நற்பெயர் கூடும். சமூகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். உறவுகளில் நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதானத்துடனும், நேர்மையாகவும் செயல்படுவது நன்மை தரும்.
 

நிதி நிலைமை:

நிதி நிலைமை சீராகவும், சமநிலையாகவும் காணப்படும். எதிர்பாராத வழிகளில் இருந்து பண ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். முதலீடுகள் மற்றும் பண விஷயங்களில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

காதல் மற்றும் உறவுகளில் சுமூகமான சூழல் நிலவும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் பேசும் பொழுது மென்மையான மற்றும் கனிவான வார்த்தைகளை கூறுவது நல்லது. சிறிய தவறான புரிதல் பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். குடும்ப இணக்கத்தால் அமைதி கிடைக்கும். துணையின் ஆதரவு நிலைத்தன்மையை அதிகரிக்கும்.

பரிகாரங்கள்:

நிதி நிலை மேம்படுவதற்கும், வாழ்க்கையில் செழிப்பு கிடைக்கவும் மகாலட்சுமி தாயாரை வணங்குங்கள். அனைத்து சவால்களில் இருந்தும் விடுதலை பெற துர்க்கை அம்மனை வழிபடுங்கள். இயலாதவர்கள், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories