Three Planet Conjunction in Aquarius 2026 Tamil : 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக் கூடிய திரிகிரக யோகம் இப்போது தொடங்கியுள்ளது. அது என்ன, அதனால் யார் யாருக்கு யோகம் என்று பார்க்கலாம்.
100 ஆண்டுகளுக்குப் பின் ஒரு அதிசயம்: கும்பத்தில் இணையும் 3 கிரகங்கள்; இந்த 3 ராசிகளுக்கு ‘ஜாக்பாட்’ தான்!
ஜோதிடத்தில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடிய அற்புதமான நிகழ்வான திரிகிரக யோகம் (3 கிரகங்களின் சேர்க்கை) இப்போது தொடங்கியிருக்கிறது. கடந்த 6ஆம் தேதி மகர ராசியில் சஞ்சாரம் செய்த சுக்கிர பகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சியானார். கும்ப ராசியில் ஏற்கனவே ராகு மற்றும் புதன் இருக்கும் நிலையில் இப்போது சுக்கிரனும் இணைந்திருப்பதால் இந்த 3 கிரகங்களின் சேர்க்கையானது திரிகிரக யோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த திரிகிரக யோகத்தால் ஜாக்பாட் அடிக்க போகும் ராசியினர் பற்றி பார்க்கலாம்.
24
மேஷம்: செல்வ, செழிப்பு உண்டாகும்
மேஷ ராசியைப் பொறுத்த வரையில் இந்த திரிகிரக யோகமானது, ஒரு வரப்பிரசாதம். ஏனென்றால், காசு, பணத்தைப் பொறுத்த வரையில் பண வரவு இருந்து கொண்டே இருக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் திரும்ப கிடைக்கும். கடனாக கொடுத்த திரும்ப வந்து சேரும். இந்த காலகட்டத்தில் உங்களது வளர்ச்சி அதிகமாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண வயதை எட்டியவர்களுக்கு திருமண வரன் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி படித்தால் வெற்றி கிடைக்கும்.
34
ரிஷபம்: கவலைகள் தீரும்; வசதி வாய்ப்புகள், கௌரவம் கூடும்
கும்பத்தில் உருவான திரிகிரக யோகத்தால் ரிஷப ராசியினரைப் பொறுத்த வரையில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உங்களது பிரச்சனைக்கான விடிவு காலம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
44
துலாம்: வெற்றியின் சிகரம்
துலாம் ராசியினரைப் பொறுத்த வரையில் இந்த திரிகிர யோகமானது கல்வி மற்றும் நிதி துறையில் இருப்பவர்களுக்கு பொற்காலமான காலமாக அமையப்போகிறது. கல்வியில் மாணவர்களுக்கு இது எதிர்பாராத காலமாக வெற்றியை தேடித்தரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதோடு, புதிய பிஸினஸின் மூலமாக நல்ல லாபமும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.