ஜோதிட சாஸ்திரத்தின்படி, நடப்பு ஜூலை மாதமானது கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் அடுத்தடுத்த மாற்றங்களால் மிக முக்கிய மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் நிகழும் கிரகப் பெயர்ச்சிகள் காரணமாகப் பல்வேறு சுப யோகங்கள் உருவாகின்றன. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசியினருக்கு இது பொற்காலமாக அமையவுள்ளது.
அந்த வகையில், வரும் ஜூலை 16 ஆம் தேதி ஜோதிட ரீதியாக ஒரு முக்கிய நாளாகப் பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்களும் ஒரே நேரத்தில் தங்களின் ராசிகளை மாற்றுகின்றன.
சூரியன் கடக ராசியிலும், சந்திரன் சிம்ம ராசியிலும் நுழைவதன் மூலம் 'ராசி பரிவர்த்தன யோகம்' உருவாகிறது. ஜோதிடத்தில் இந்த கிரகங்களின் பரிமாற்றம் மிகவும் அரிய மற்றும் சக்திவாய்ந்த ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த அபூர்வ யோகத்தால் அசுர வளர்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் பெறப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம்.