விருச்சிக ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிர பகவான் அமர இருக்கிறார். இதன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளுக்கு வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைக்கும். காதல் உறவில் இருப்பவர்கள் திருமண உறவில் நுழைவீர்கள். தங்கம், வெள்ளி, பங்குச் சந்தை போன்ற திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் எதிர்பாராத லாபங்களைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)