வேலையில் விஸ்வரூபம் எடுக்கும் சிம்மம்! கூடவே வரும் பஞ்சாயத்து; தப்பிக்க செய்ய வேண்டியது என்ன?

Published : Feb 03, 2026, 06:00 PM IST

Simma Rasi February Month Rasi Palan 2026 in Tamil : சிம்மம் ராசிக்கான பிப்ரவரி மாத ராசி பலன்கள் என்ன என்பது பற்றி பார்க்கலாம். இதில், சிம்ம ராசியினரின் வாழ்க்கை, குடும்பம், தொழில், கல்வி எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

PREV
13
வேலையில் விஸ்வரூபம் எடுக்கும் சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு 7 இடத்தில் கேது மிகவும் உக்கிரமாக இருப்பதால் மற்றவர்களிடமிருந்து நமக்கு தீமையை வரும் ஆகையால் மற்றவர்களிடமிருந்து தள்ளி இருத்தல் மிகவும் நல்லது. மற்றவர்களிடமிருந்து நமக்கு பிரச்சினைகளும் கஷ்டங்களும் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.

23
கோபம் வேண்டாம்:

 ஏழாம் வீட்டில் கிரகம் சரியில்லாத காரணத்தினாலும் கேது அமைந்திருப்பதாலும் கோபம் கொள்ள வேண்டாம். மற்றவர்கள் நம்மளை கோபப்படுத்தியும் பார்ப்பார்கள் அந்த இடத்தில் நாம் அமைதியாகவே இருந்து வர வேண்டும். வேலை இடங்களில் நம்மளை கோபம் மூட்டும் வகையில் சக உறுப்பினர்கள் உண்டாக்குவார்கள். இந்த இடத்தில் நம் பொறுமையாகவே இருந்து வரவேண்டும். ஆனால் மற்றவர்கள் மூலம் நமக்கு ஆதாயம் கிடைக்கும் ஆனால் அது அளவிற்கு இழப்பும் ஏற்படலாம். முடிவையும் நிதானமாகவே கையாள வேண்டும். ஒரு வேலையும் தாமதமாகவே நடக்கும். குருவின் பார்வையை நம் மீது இருப்பதால் கொஞ்சம் நன்மையும் நடக்கும் தாமதமாக இருந்தாலும் நன்மையே முடியும். ஏழாம் இடத்தில் இருக்கும் ராகுவும் ராசிநாதனும் இணைவதால் நம் மீது பலிச்சொல் மற்றும் அவச்சொல் ஏற்படலாம். அடுத்தவர்கள் செய்வதற்கும் கூட நம்மில் பழி வர வாய்ப்புகளும் இருக்கிறது.

33
குடும்ப வாழ்க்கை, உடல்நலம், வழிபாடு:

கணவன் மனைவிக்கிடையே அதிக பிரச்சனைகள் ஏற்படும். இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்வதே சிறப்பு. கல்வி: இந்த சிம்ம ராசிக்காரர்கள் இருக்கும் மாணவி மாணவிகள் சரிவையே காண்பீர்கள். ஆகையால் நீங்கள் மனம் தளராமல் படித்து முடிக்க வேண்டும். உடல்நலத்தில் மிக கவனம் தேவை. ஏனென்றால் கேது நம் தலை மீது இருப்பதால் கவனமாகவே இருக்க வேண்டும். வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் முதுகு வலி போன்றவைகள் ஏற்படலாம். முருகனை நன்றாக வணங்குதல் வேண்டும் முருகன் துணை இருக்க எது வேணாலும் நாம் துணிவுடன் செய்யலாம். 18721 என்ற எண்ணை எழுதிவிட்டு அலுவலகத்திற்கோ அல்லது பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்லும் போது எழுதி விட்டுச் செல்ல வேண்டும் சென்றால் நன்மையே நடக்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories