
வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மற்றும் புதன் இருவரும் சுப கிரகங்களாக அறியப்படுகின்றனர். சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், அழகு, அறிவு, வசதிகள் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகவும், புதன் பகவான் வணிகம், பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் கிரகமாகவும் விளங்குகிறார். நவம்பர் 2 அன்று சுக்கிரன் துலாம் ராசிக்குள் சஞ்சரித்து நவம்பர் 26 வரை அங்கேயே இருக்கிறார்.
இந்த நிலையில் நவம்பர் 23 அன்று மாலை 7:58 மணிக்கு புதன் துலாம் ராசிக்குள் நுழைந்து டிசம்பர் 6 வரை சஞ்சரிக்க இருக்கிறார். நவம்பர் 23, 2025 அன்று சுக்கிரன் துலாம் ராசியில் புதனை சந்திக்க இருக்கிறார். ஜோதிடத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்த இணைப்பாக கருதப்படுகிறது. இந்த இணைப்பால் அதிக பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)