வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மற்றும் புதன் இருவரும் சுப கிரகங்களாக அறியப்படுகின்றனர். சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், அழகு, அறிவு, வசதிகள் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகவும், புதன் பகவான் வணிகம், பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் கிரகமாகவும் விளங்குகிறார். நவம்பர் 2 அன்று சுக்கிரன் துலாம் ராசிக்குள் சஞ்சரித்து நவம்பர் 26 வரை அங்கேயே இருக்கிறார்.
இந்த நிலையில் நவம்பர் 23 அன்று மாலை 7:58 மணிக்கு புதன் துலாம் ராசிக்குள் நுழைந்து டிசம்பர் 6 வரை சஞ்சரிக்க இருக்கிறார். நவம்பர் 23, 2025 அன்று சுக்கிரன் துலாம் ராசியில் புதனை சந்திக்க இருக்கிறார். ஜோதிடத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்த இணைப்பாக கருதப்படுகிறது. இந்த இணைப்பால் அதிக பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.