சனி வக்கிர பெயர்ச்சி அடையும் நிலையில், சனியின் வக்ர பார்வைக்கு அஞ்சாமல் எப்போதும் அதிர்ஷ்டம் கொட்டும் சனி பகவானுக்கு பிடித்த 3 ராசிகள் உள்ளன. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து பார்ப்போம்.
நவக்கிரகங்களில் 'நீதிபதி' என்று அழைக்கப்படும் சனி பகவான், நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர். பொதுவாகச் சனியின் பெயர்ச்சி அல்லது பார்வை என்றாலே பலருக்கும் ஒருவித அச்சம் எழுவது இயல்பு. ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட சில ராசிகள் மீது சனி தேவனின் அருள் எப்போதும் பரிபூரணமாகவே இருக்கும்.
தற்போது சனி பகவான் வக்ர நிலையில் (பின்னோக்கி) பயணித்து வரும் சூழலில், சனியின் பேரருளைப் பெறும் அந்த டாப் 3 ராசிகள் எவை என்பதை ஜோதிட சாஸ்திர ரீதியாக விரிவாகப் பார்ப்போம்.
ஜோதிட விதிக் கணக்கீடுகளின்படி, மகர ராசியின் அதிபதியே சனி பகவான்தான். தன் சொந்த வீடான மகரத்தில் பிறப்பவர்களுக்கு இயல்பாகவே அதிக பொறுமை, கடின உழைப்பு மற்றும் தளராத நம்பிக்கை இருக்கும்.
சனி பகவான் உழைப்புக்கு மதிப்பளிப்பவர் என்பதால், மகர ராசிக்காரர்களின் நேர்மையான உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தருவதில் அவர் தயங்குவதில்லை. வக்ரப் பெயர்ச்சி காலத்திலும் கூட, இவர்களுக்குப் பெரிய அளவிலான கெடுபலன்கள் ஏற்படாது; மாறாக, தடைபட்ட காரியங்கள் துரிதமாக முடிந்து தொழில் மேன்மையும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் உண்டாகும்.
சனியின் மற்றொரு சொந்த வீடு கும்பம் ஆகும். குறிப்பாக, ஜோதிட சாஸ்திரத்தில் கும்ப ராசி சனியின் 'மூலத்திரிகோண வீடாக' கருதப்படுகிறது. அதனால், கும்ப ராசியினருக்குச் சனி தேவன் எப்போதும் சிறப்புச் சலுகைகளை அள்ளி வழங்குவார்.
கும்ப ராசியில் பிறந்தவர்கள் பொதுநலச் சிந்தனையும், ஏழை எளியோருக்கு உதவும் குணமும், நியாய தர்மத்திற்கு மதிப்பளிக்கும் தன்மையும் கொண்டவர்கள். இந்த நற்குணங்கள் சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். எனவே, சனி தன் வக்ரப் பாதையில் செல்லும்போது கும்ப ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகளில் சாதகமான சூழலும், புதிய வாய்ப்புகளும் தேடி வரும்.
ஜோதிட சாஸ்திரப்படி, 12 ராசிகளில் சனி பகவான் 'உச்சம்' பெறக்கூடிய ஒரே ராசி துலாம் ஆகும். ஒரு கிரகமானது தனது உச்ச ராசியில் இருக்கும்போது மிக உயர்ந்த நற்பலன்களையும் ராஜயோகத்தையும் தரும்.
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரனாக இருந்தாலும், சனியின் உச்ச வீடாக அது திகழ்வதால், துலாம் ராசியினருக்குச் சனியால் பெரும் முன்னேற்றம் கிடைக்கும். இவர்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் நடக்கும் பட்சத்தில், சனியின் வக்ரக் காலத்தில் எதிர்பாராத திடீர் பணவரவும், தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உச்சமும் நிச்சயம் சாத்தியமாகும்.
55
சனியின் அருள் பெற எளிய வழிகள்
ஜோதிட வல்லுநர்களின் கருத்துப்படி, சனி பகவான் ஒருவரது பிறப்பு ராசியை விடவும் அவரது செயல்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார். எனவே, உங்கள் ராசி இந்தப் பட்டியலில் இல்லை என்றாலும் கவலைப்படத் தேவையில்லை.
உழைப்பாளர்களைக் மதிப்பவது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குவது, சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபாடு செய்வது போன்ற எளிய விஷயங்கள் மூலம் சனி பகவானின் கெடுபலன்களிலிருந்து தப்பித்து, அவரது பூரண அருளைப் பெற முடியும்.