மகர ராசிக்கு 7 ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வதால், குடும்ப வாழ்க்கையிலும் தொழில் கூட்டாண்மையிலும் சிறு சவால்களைச் சந்திக்க நேரிடும். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளதால், விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். தன்னம்பிக்கையைக் கைவிடாமல் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், யாரிடம் பேசும்போதும் வார்த்தைகளில் கவனம் தேவை.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மன் வழிபாட்டை மேற்கொள்வதுடன், ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபடலாம்.
செவ்வாய் தோஷம் விலக ஹனுமான் பாராயணம் செய்வது மன வலிமையையும் தெளிவையும் தருவதோடு பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.