வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அதிலும் குரு பகவானும், செவ்வாய் பகவானும் இணையும் காலம் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. குரு அறிவு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மிக முன்னேற்றத்தை குறிக்கும் கிரகமாகவும், செவ்வாய் தைரியம், ஆற்றல், செயல் திறன் மற்றும் நில சொத்துகளின் காரகனாகவும் போற்றப்படுகிறார்.
செப்டம்பர் 19ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே அதே ராசியில் குரு பகவான் சஞ்சரித்து வருவதால், இந்த இரு கிரகங்களின் அரிய இணைவு உருவாகிறது. இந்த யோகம் அடுத்த ஒன்றரை மாத காலத்திற்கு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம், வருமான உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
Gajakesari Yoga: பிறக்கும் போதே கஜகேசரி ராஜயோகத்துடன் பிறக்கும் ராசிகள் யார்? குருவின் சக்திவாய்ந்த பார்வை இவர்களுக்கு எப்போதும் இருக்குமாம்.!