வேத ஜோதிடத்தின் படி சுக்கிர பகவான் செல்வம், மகிழ்ச்சி, ஆடம்பரம், பொன், பொருள், வசதிகள் ஆகியவற்றின் கிரகமாக அறியப்படுகிறார். குரு பகவான் ஞானம், அறிவு, கல்வி, செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இந்த இரண்டு கிரகங்களும் குறிப்பிட்ட கோணத்தில் இணையும் பொழுது சக்தி வாய்ந்த ‘பஞ்சாங்க ராஜயோகம்’ உருவாகிறது.
அக்டோபர் 19 ஆம் தேதி அதிகாலை 3:21 மணிக்கு குரு மற்றும் சுக்கிரன் ஒருவருக்கொருவர் 72 டிகிரி கோணத்தில் அமைகின்றனர். இந்த அரிய யோகம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாவதால் தீபாவளிக்கு முன்பாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்க இருக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.