நியூமராலஜிப்படி குறிப்பிட்ட இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும், கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
நியூமராலஜிப்படி, ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் மூல எண் கணக்கிடப்படுகிறது. 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களுக்கு மூல எண் 2 ஆகும். இந்த எண்ணின் அதிபதி சந்திரன் என கருதப்படுகிறது.
25
மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள்
சந்திரன் மனதை குறிக்கும் கிரகம் என்பதால், இந்த எண்ணில் பிறந்த பெண்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். பிறரின் துயரத்தை உடனே உணர்ந்து உதவ முன்வருவார்கள். அவர்களின் இரக்கம் மற்றும் கருணை அதிகமாக இருக்கும்.
35
2, 11, 20, 29 தேதியில் பிறந்த பெண்கள் எப்படி?
ஆனால் இதே குணம் சில சமயம் அவர்களுக்கு பாதகமாக அமையும். அவர்கள் இதயத்தால் யோசிப்பவர்கள். எளிதில் நம்புவார்கள். உறவுகளில் முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பதால், தவறான நபர்களை நம்பி ஏமாறும் சூழ்நிலையும் உருவாகலாம்.
எண் 2 உள்ள பெண்கள் அமைதியான மற்றும் குடும்பத்தை மதிக்கும் குணம் கொண்டவர்கள். நல்ல வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள் என நம்பப்படுகிறது. ஆனால் உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டு முடிவெடுத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உறுதி.
55
எளிதில் நம்பும் குணம்
தொழில் மற்றும் சமூக வாழ்வில் அவர்கள் நல்ல மரியாதையைப் பெறுவார்கள். உணர்ச்சியையும் விவேகத்தையும் சமநிலைப்படுத்துவது இவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமையும் என்று கூறுகிறார்கள். ஜோதிட தகவல்கள் பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் கூறப்படுகின்றன.