2025 சனி பெயர்ச்சி: பட்டி டிங்கரிங் செய்ய போகும் சனி; மேஷ ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம்; என்னென்ன பலன் கிடைக்கும்?

Published : Nov 04, 2024, 07:22 AM ISTUpdated : Nov 04, 2024, 07:30 AM IST

Mesha Rasi Sani Peyarchi 2025 Palan in Tamil: 2025 மார்ச் 29 இல் சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் மேஷ ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது. இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கும், உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

PREV
15
2025 சனி பெயர்ச்சி: பட்டி டிங்கரிங் செய்ய போகும் சனி; மேஷ ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம்; என்னென்ன பலன் கிடைக்கும்?
Sani Peyarchi 2025 Palan, Astrology, Aries, Mesha Rasi Sani Peyarchi 2025 Palan in Tamil

நீதிமான், தப்பு செய்தால் தண்டிக்ககூடியவர் என்று சொல்லப்படும் சனி பகவான் தான் ஒரு ராசியில் நீண்ட நாட்கள் டிராவல் பண்ணக் கூடியவர். மற்ற கிரகங்களான குரு, ராகு, கேது, சூரியன், சந்திரன், செவ்வாய் கிரகங்களைக் காட்டிலும் சனி தான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் டிராவல் செய்வார். தற்போது கும்பத்தில் இருக்கும் சனி பகவான், குரு பகவான் ஆட்சி செய்யக் கூடிய மீன் ராசியில் நுழைய இருக்கிறார்.

வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி இரவு 22.07 மணிக்கு கும்பத்திலிருந்து மீன ராசிக்கு செல்கிறார். இதன் மூலமாக கடந்த ஏழரை ஆண்டுகளாக சனியின் பிடியில் சிக்கித் தவித்த மகர ராசியினருக்கு விடிவுகாலம் பிறக்க போகிறது.

25
Saturn Transit 2025 Palan in Tamil, Mesham Sani Peyarchi 2025 Palan in Tamil

மீனத்திற்கு செல்லும் சனி பகவான் அடுத்து இரண்டரை ஆண்டுகள் மீன ராசியில் நீடிப்பார். இதற்கிடையில் குறிப்பிட்ட மாதம் மட்டும் வக்ர பெயர்ச்சி அடைந்து அதன் பிறகு மீண்டும் வக்ர நிவர்த்தி அடைவார். அதாவது, மார்ச் 29 ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி அடையும் சனி பகவான் ஜூலை 13 ஆம் தேதி காலை 7.24 மணிக்கு வக்ர பெயர்ச்சி அடைவார். அதன் பிறகு மீண்டும் நவம்பர் 28 ஆம் தேதி காலை 7.26 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைவார்.

இந்த சனி பெயர்ச்சி மேஷ ராசிக்கு ஏழரை சனியாக ஆரம்பமாகிறது. சுமார் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் இருப்பதால், ராசிக்காரர் அந்த இரண்டரை ஆண்டுகள் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப தண்டனைகளை கொடுத்து அவர்களுக்கு புத்திமதி சொல்லி நல்வழிப்படுத்தும் வேலையை செய்வார். அப்படியும் அவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்களது உடலில் உயிர் மட்டுமே மிஞ்சியிருக்கும் வகையில் அவர்களை வச்சு செய்வார்.

35
Saturn Transit 2025, Aries Sani Peyarchi 2025 Palan in Tamil

மீன ராசிக்கு பெயர்ச்சி செய்யும் சனி பகவான் அந்த ராசிக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகள் செய்ய வேண்டிய வேலையை செய்வார். மேஷத்திற்கு முதல் இரண்டரை ஆண்டுகளும், கும்பத்திற்கு கடைசி இரண்டரை ஆண்டுகளும் சனியின் தாக்கம் இருக்கும். 2025 ஆம் ஆண்டு சனியின் சஞ்சாரம் தொழில், வேலை வாய்ப்பு, வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பது குறித்து ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக பார்க்கலாம். முதலில் ஏழரை சனி ஆரம்பிக்க கூடிய மேஷ ராசிக்கு சனி பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசிக்கு 10 மற்றும் 11ஆவது வீடுகளுக்கு அதிபதி சனி பகவான். அவர் இப்போது 12 ஆம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார். இதனால், மேஷ ராசிக்கு ஏழரை சனி (சேட் சதி) ஆரம்பமாகிறது. 12ஆவது வீட்டிற்கு வரும் சனி பகவான் உங்களது 2, 6 மற்றும் 9ஆவது வீடுகளை பார்க்கிறது. இதன் மூலமாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும். உங்களது நீண்ட கால ஆசைகள் யாவும் நிறைவேறும்.

45
Mesham Sani Peyarchi 2025 Palan in Tamil, Sani Peyarchi 2025 Palan

எனினும், வருமானத்தைக் காட்டிலும் செலவுகள் அதிகமாகவே இருக்கும். பொருளாதாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். கண் தொடர்பான பிரச்சனைகள், காலில் காயங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்வது நன்மை அளிக்கும். காரில் சென்றால் சீட் பெல்ட் அணிந்து பயணிக்கவும்.

வெளிநாட்டு பணம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது வெளிநாட்டில் வேலையோ, வெளிநாட்டு வியாபாரமோ செய்து அதன் மூலமாக வருமானம் வரக் கூடிய சூழல் இருக்கிறது. ஏழரை சனியின் முதல் இரண்டரை ஆண்டுகள் விரையச் சனி என்பதால் எவ்வளவு வருமானம் வந்தால் எப்படி செல்வாகிறது என்றே உங்களுக்கு தெரியாது. வருமானத்தை சேமிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மேஷ ராசிக்கு இந்த ஏழரை காலம் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ள கூடிய அனுபவத்தை பெற்று தரும்.

55
2025 Sani Peyarchi Mesha Rasi Palan, Mesha Rasi Sani Peyarchi 2025 Palan in Tamil

பரிகாரம்:

சனிக்கிழமை தோறும் கருப்பு நிற உடை அணிந்து காலில் காலணி இல்லாமல் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் துப்புரவு பணியாளர்களுக்கு காலனி, குடை, சாப்பாடு வாங்கி கொடுக்கலாம்.

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபாடு செய்யலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories