ஆகஸ்ட் மாத இறுதியில் புதன் பெயர்ச்சி: 3 ராசிகள் நகைக்கடையை கூட விலைக்கு வாங்கும் அளவிற்கு அதிர்ஷ்டம் அடிக்கும்!

Published : Aug 19, 2025, 09:06 PM IST

Mercury Transit in Leo at End of August 2025 : ஆகஸ்ட் மாத இறுதியில் புதன் கிரகம் சிம்ம ராசிக்குள் நுழைகிறது. இதனால் இந்த 3 ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய வெற்றியையும், பொருளாதார லாபத்தையும் பெற வாய்ப்புள்ளது.

PREV
14
ஆகஸ்ட் மாத இறுதியில் புதன் பெயர்ச்சி: 3 ராசிகள் நகைக்கடையை கூட விலைக்கு வாங்கும் அளவிற்கு அதிர்ஷ்டம் அடிக்கும்!

Mercury Transit in Leo at End of August 2025 : வேத ஜோதிடத்தின் படி ஆகஸ்ட் 30 அன்று புதன் கடக ராசியை விட்டு தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைகிறது. சூரியனின் ராசிக்குள் புதன் நுழைவது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் ராசிகளுக்கு மத்தியில் இந்த 3 ராசிகள் சற்று வித்தியாசமாக அதிக பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. அந்த ராசிகள் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
ரிஷப ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்

இந்த ராசியின் இரண்டாவது மற்றும் ஐந்தாவது வீடுகளின் அதிபதியான புதன் கிரகம் சிம்ம ராசிக்குள் நுழைந்து நான்காவது வீட்டில் தங்குகிறார். எனவே, இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறலாம். நீண்ட காலமாக நின்றுபோன வேலைகள் மீண்டும் தொடங்கும். அது வீடு கட்டும் பணியாக இருந்தாலும் சரி. நிலம் தொடர்பான விஷயங்களில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி மற்றும் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். ஆடம்பர வசதிகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

34
கடக ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்

இந்த ராசியின் மூன்றாவது மற்றும் பன்னிரண்டாவது வீடுகளின் அதிபதியான புதன் கிரகம் இரண்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே, இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறலாம். திடீர் பணவரவு ஏற்படலாம். இந்த காலகட்டத்தில், நீங்கள் ஆடம்பர வாழ்க்கை வாழலாம். உங்கள் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.

44
துலாம் ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்

இந்த ராசியின் ஒன்பதாவது மற்றும் பன்னிரண்டாவது வீடுகளின் அதிபதியான புதன், சிம்ம ராசிக்குள் நுழைந்து லாப ஸ்தானத்தில் அமர்கிறார். எனவே, இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறலாம். நீண்ட காலமாக நின்றுபோன வேலைகள் மீண்டும் தொடங்கும். தொழிலில் பெரிய லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வருமான வழிகள் திறக்கும். ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடைக்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories