ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும் தங்கள் நிலையை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் இந்த மாற்றமானது மனிதர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் சுக்கிர பகவான் நவம்பர் 26 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைய இருக்கிறார். அங்கு ஏற்கனவே கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் பயணித்து வருகிறார். இதன் காரணமாக 18 மாதங்களுக்குப் பிறகு விருச்சிக ராசியில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை நடைபெற உள்ளது.
சுக்கிர பகவான் அழகு, அன்பு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல், உறவுகள், பொன், பொருள், வசதிகளின் காரகராகவும், செவ்வாய் பகவான் ஆற்றல், வீரம், தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவற்றின் காரகராகவும் விளங்குகிறார். இந்த இரண்டு சுப கிரகங்களின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.