திருமணம் ஆகாத பெண்களுக்கு உடை, குங்குமம், மஞ்சள் போன்றவற்றை தானமாக வழங்குவது மிகப்பெரிய பரிகாரமாக கருதப்படுகிறது. இதனால் திருமணத் தடைகள் நீங்கும் என கூறப்படுகிறது.
துளசி பூஜை
தினமும் மாலை துளசி செடிக்கு நீர் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்ப வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள்
செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோவிலுக்கு சென்று சிவப்பு மலர் அர்ச்சனை செய்வது நல்ல பலன் தரும். “கந்த சஷ்டி கவசம்” படிப்பதும் சிறப்பு. நம்பிக்கையுடன் தொடர்ந்து இந்த பரிகாரங்களை செய்து வந்தால் திருமணத் தடை குறைந்து விரைவில் நல்ல வாழ்க்கைத்துணை அமையும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.