ஜோதிட சாஸ்திரத்தில் ஐந்து மங்களகரமான யோகங்கள் “பஞ்ச மகா புருஷ யோகங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த யோகங்களில் மாளவ்ய ராஜயோகமும் ஒன்று. இந்த யோகம் சுக்கிரன் பகவான் ஒருவரின் ஜாதகத்தில் வலிமையுடன் கேந்திர ஸ்தானங்களான (1,4,7,10) ஆகிய வீடுகளில் அமையும் பொழுதோ, தனது சொந்த ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் அல்லது உச்ச ராசியிலான மீனம் ஆகியவற்றில் சஞ்சரிக்கும் பொழுதோ உருவாகிறது.
நவம்பர் 2, 2025 அன்று சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைய இருக்கிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த ராஜயோகம் நவம்பர் 2, 2025 முதல் நவம்பர் 26, 2025 வரை சுக்கிரன் துலாம் ராசியில் இருக்கும் வரை நீடிக்க இருக்கிறது. எனவே நவம்பர் மாதம் முழுவதும் சில ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். மாளவ்ய ராஜயோகத்தால் பலன் பெறும் மூன்று ராசிகள் குறித்து இங்கு காணலாம்.