Oct 23 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று எத்தனை தடைகள் வந்தாலும், அதை உடைத்து சாதித்து காட்டுவீர்கள்.!

Published : Oct 22, 2025, 05:06 PM IST

Today Rasi Palan : அக்டோபர் 23, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
அக்டோபர் 23, 2025 மகர ராசிக்கான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காணும் நாளாக இருக்கும். எந்த காரியமானாலும் துணிச்சலுடன் செயல்பட்டு முடித்துக் காட்டுவீர்கள். லாபத்தை கருதாமல் உழைப்புக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். போட்டிகளை சந்திக்க நேரிடலாம். எனவே கவனத்துடனும் முன் யோசனையுடனும் செயல்படுவது நல்லது.
 

நிதி நிலைமை:

இன்றைய தினம் பண வரவு திருப்திகரமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். இருப்பினும் நிதி சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பண பரிவர்த்தனைகளின் போது யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்காமல், நீங்களே முன் நின்று நடத்தவும். வியாபாரத்தில் விற்பனை இன்று அதிகரிக்கும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறவுகள் இன்று திருப்திகரமாக இருக்கும். உங்களது பேச்சை பிறர் கேட்டு சரியாக நடந்து கொள்வார்கள். இதன் காரணமாக குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் இழுபறியாக இருந்த விஷயங்கள் முடிவுக்கு வந்து சாதகமான பலன்கள் கிடைக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணமாகும் சூழல் உருவாகும்.

பரிகாரங்கள்:

உங்கள் ராசிக்கு அதிபதியான சனீஸ்வர பகவானை வழிபடலாம். ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது தைரியத்தை அதிகரிக்கும். அருகில் உள்ள விநாயகர் கோவிலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஏழை எளியவர்களுக்கு உதவுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories