V என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் பணிவானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் மன உறுதி மிக்கவர்கள். இவர்கள் தங்கள் திறமையை மட்டுமே நம்பி முன்னேறக் கூடியவர்கள். இவர்களின் மன உறுதியும், தனிப்பட்ட திறமையும் இளம் வயதிலேயே இவர்களுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தருகிறது.
செல்வத்தை குவித்து உயர் அந்தஸ்தை பெறத் துடிப்பார்கள். பணம் மீது இவர்களுக்கு இருக்கும் நாட்டம் உழைத்து சம்பாதிப்பதற்கான வழியை தேடுவதற்கு தூண்டுகிறது. இவர்கள் பிறக்கும் பொழுதே கோடீஸ்வரராக பிறக்கும் அதிர்ஷ்டத்துடனும், அதை அடைவதற்கு தேவையான ஆற்றலுடனும் பிறக்கின்றனர்.
இவர்களே உண்மையான கோடீஸ்வரர்கள்
எண் கணிதத்தின்படி இந்த நான்கு எழுத்துக்களில் பெயர் தொடங்கினால் கோடீஸ்வரர் ஆவதற்கான கதவுகள் திறப்பதாக நம்பலாம். இருப்பினும் அதிர்ஷ்டம் என்பது ஒரு ஆரம்பப் புள்ளி மட்டுமே. ஒருவர் கோடீஸ்வரர் ஆவதற்கு கடின உழைப்பு, சரியான திட்டமிடல், உறுதியான முயற்சி, இலக்கை நோக்கிய பயணம், புத்திசாலித்தனமான முதலீடுகள் மூலமே சாத்தியமாகும்.
உங்கள் பெயரின் முதல் எழுத்து அதிர்ஷ்டமானதாக இருந்தாலும், விடாமுயற்சி மட்டுமே உங்களை கோடீஸ்வரராக மாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த எழுத்தில் உங்கள் பெயர் தொடங்காவிட்டாலும் கவலை வேண்டாம். யார் ஒருவர் தன் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராது உழைக்கிறார்களோ அவர்களே உண்மையான கோடீஸ்வரராக மாறுகிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)