Oct 30 Today Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும்.! எச்சரிக்கையாக இருங்க மக்களே.!

Published : Oct 29, 2025, 04:29 PM IST

Today Rasi Palan : அக்டோபர் 30, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
அக்டோபர் 30, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் மனதில் சிறு குழப்பங்கள், தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். உணர்ச்சி ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே திடமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். திடீர் பயணங்கள் எதிர்பாராத சுற்றுலா செல்ல நேரிடலாம்.
 

நிதி நிலைமை:

இன்று பணம் தேவைப்படும் நாளாக இருக்கும். செலவுகள் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கவனத்துடன் செயல்படவும். பணத்தை சேமிக்க முயற்சிப்பது நல்லது. உங்களின் அன்றாட தேவைகளுக்கு பணம் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். இருப்பினும் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான பண வசதி கிடைக்கும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் திடீரென குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்ல வேண்டியது அவசியம். நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள தகராறுகளை தீர்க்க நல்ல நாளாகும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அவர்களின் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரங்கள்:

இன்று சிவபெருமான் அல்லது மகாலட்சுமி தாயாரை வழிபடுவது நன்மைகளைத் தரும். இன்று ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு தேங்காய் மற்றும் பாதாம் பருப்புகளை கொடுத்து வழிபட குடும்ப உறவுகளில் இருந்த சச்சரவுகள் தீரும். இயலாதவர்களுக்கு உதவி செய்வது நேர்மறை பலன்களைக் கூட்டும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories