12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பெயர்ச்சி: 'கோடீஸ்வர யோகம்' பெறும் 3 ராசிகள்! அதிர்ஷ்ட மழை!

Published : Aug 30, 2026, 07:15 AM IST

Guru Peyarchi 2026: குரு பகவான் சிம்ம ராசிக்குள் பெயர்ச்சியாவதால் 3 ராசிகள் கோடீஸ்வர யோகம் பெறப்போகின்றன. அவை எந்தெந்த ராசிகள்? என விரிவாக பார்ப்போம்.

PREV
14
குரு பெயர்ச்சி 2026

நவக்கிரகங்களில் 'குரு பகவான்' சுப கிரகமாகவும், தேவர்களின் குருவாகவும் போற்றப்படுகிறார். ஒருவரின் வாழ்க்கையில் செல்வம், புத்தி கூர்மை, குழந்தை பாக்கியம், குடும்ப மகிழ்ச்சி, மன நிறைவு மற்றும் நல்ல யோகங்களை அள்ளித்தருபவர் இவரே. தனுசு மற்றும் மீன ராசிகளை தனது சொந்த வீடுகளாகக் கொண்ட குரு பகவான், ஒரு ராசியைக் கடக்க ஓராண்டு காலம் எடுத்துக்கொள்கிறார். இதனால் இவரது பெயர்ச்சியும், அதன் தாக்கமும் மனிதர்களின் வாழ்வில் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

தற்போது கடக ராசியில் (உச்ச நிலை) அதிசாரத்தில் பயணித்து வரும் குரு பகவான், வரும் அக்டோபர் 31-ஆம் தேதி தனது பயணப் பாதையை மாற்றி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த சிம்ம ராசி குரு பெயர்ச்சியானது தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, கௌரவம் மற்றும் தொழில் ரீதியான பெரும் மாற்றங்களை அள்ளித்தரவுள்ளது. இந்த சுபப் பெயர்ச்சி 12 ராசிகளிலுமே பலன்களைத் தந்தாலும், குறிப்பிட்ட 3 ராசியினருக்குப் பேராதரவாகவும், அதிர்ஷ்ட மழையைப் பொழிவதாகவும் அமையவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றிப் பார்ப்போம்.

24
சிம்மம்

குரு பகவான் சிம்ம ராசியின் லக்னம் எனப்படும் முதல் வீட்டிற்கு வருகை தருகிறார். இதனால் உங்கள் வாழ்வில் நேர்மறையான திருப்பங்கள் உண்டாகும். சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் இரட்டிப்பாகும். நீண்ட நாட்களாக முடங்கிக்கிடந்த வேலைகள் விரைந்து முடிவடையும்.

பணியிடத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து லாபம் பெருகும். நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கும். புதிய வருமான வழிகள் திறப்பதுடன், பழைய முதலீடுகளிலிருந்தும் நல்ல லாபம் வந்து சேரும்.

34
கடகம்

கடக ராசிக்கு 2-ஆம் வீடான தன மற்றும் குடும்ப ஸ்தானத்திற்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். இதனால் நிதி நிலைமையில் பெரும் வளர்ச்சி காணப்படும். வருமானம் உயர்ந்து, சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். நிதி சார்ந்த நெருக்கடிகள் விலகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்த கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள், பாராட்டுக்கள் மற்றும் புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி எதிர்பாராத லாபத்தைக் கொடுக்கும். நிலுவையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.

44
மகரம்

மகர ராசிக்கு 8-ஆம் வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இது உங்கள் தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக நன்மையான மாற்றங்களை அலை அலையாகக் கொண்டு வரும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும்.

புதிய வேலை தேடுபவர்களுக்கும், பணிமாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கும் சிறப்பான வாய்ப்புகள் அமையும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் மற்றும் பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து நிதி நிலைமை சீராகும். நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது மட்டும் அவசரப்படாமல், தீர ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories