வீட்டில் கரப்பான் பூச்சி நடமாடுவதைக் கண்டாலே அலறி அடித்துக்கொண்டு ஓடுபவர்கள் தான் நம்மில் அதிகம். ஆனால், இந்த கரப்பான் பூச்சிக்கும் உங்கள் வீட்டுப் பண வரவிற்கும் ஏதோ ஒரு ரகசியத் தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?
பொதுவாக ஆந்தை, யானை போன்றவற்றை லட்சுமியின் அம்சமாகப் பார்ப்போம். ஆனால், சில வட இந்திய ஆன்மீக நம்பிக்கைகளின்படி, வீட்டில் திடீரென 'வெள்ளை' நிற கரப்பான் பூச்சியைக் காண்பது பண வரவிற்கான அறிகுறி என்று நம்பப்படுகிறது!
25
வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது?
வாஸ்து விதிகளின்படி, கரப்பான் பூச்சிகள் 'ராகு' மற்றும் 'சனி' கிரகங்களின் தாக்கத்தைக் குறிக்கின்றன. வீட்டில் அளவுக்கு அதிகமாக கரப்பான் பூச்சிகள் மொய்ப்பது, அங்கு எதிர்மறை ஆற்றல் (Negative energy) மற்றும் பண விரயம் அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது.
35
கிச்சனில் இருந்தால் என்ன அர்த்தம்?
சமையலறை என்பது அன்னபூரணியின் இருப்பிடம். அங்கு கரப்பான் பூச்சிகள் ராஜ்ஜியம் நடத்தினால், குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவச் செலவுகள் அதிகரித்து, கையில் இருக்கும் பணம் கரையும்.
வீட்டில் வறுமை நீங்கி, லட்சுமி கடாட்சம் தங்க வேண்டுமானால், வீட்டின் மூலைகளில் குறிப்பாக சமையலறையில் லவங்கம் (Cinnamon) அல்லது கற்பூரத்தை வையுங்கள். இதன் வாசனைக்கு ராகு தோஷமும் விலகும், கரப்பான் பூச்சிகளும் வீட்டை விட்டு ஓடும்!
55
அறிவியல் சொல்லும் கசப்பான உண்மை!
வாஸ்துவை தாண்டி, கரப்பான் பூச்சிகள் உமிழ்நீர் மற்றும் எச்சம் மூலம் டைபாய்டு, அலர்ஜி போன்ற நோய்களைப் பரப்புகின்றன. ஆரோக்கியம் கெட்டால், லட்சுமி அந்த இடத்தில் தங்க மாட்டாள் என்பதுதான் நிதர்சனம்.