ஜோதிட சாஸ்திரத்தில் 'தேவகுரு' என்று அழைக்கப்படுபவர் வியாழன் (குரு பகவான்). நவகிரகங்களில் மிகவும் சுபமான கிரஹமாகவும், மனிதர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம், அறிவு மற்றும் மகிழ்ச்சியை அள்ளித் தரும் முதன்மைக் கடவுளாக போற்றப்படுகிறார். இந்நிலையில் ஜூன் 2-ம் தேதி தேவகுரு வியாழன் கடக ராசிக்குள் நுழைகிறார். குருவின் இந்த அதிரடி ராசி மாற்றத்தின் காரணமாக, ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் மிக மிகச் சுபமானதாகக் கருதப்படும் 'ஹம்ச ராஜயோகம்' உருவாகிறது. இதனால் இந்த 5 ராசிகளுக்கு அதிஷ்ட மழை கொட்டப்போகிறது.