வேத ஜோதிடத்தில் வளர்ச்சி, ஞானம், அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்திற்கு அதிபதியாகத் திகழ்பவர் குரு பகவான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர சுமார் ஓராண்டு காலம் எடுத்துக்கொள்ளும் குரு பகவான், தற்போது தனது உச்ச வீடான கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
வரும் அக்டோபர் 31 அன்று குரு பகவான் கடக ராசியில் இருந்து பெயர்ச்சியாகி, சிம்ம ராசியில் தனது பயணத்தைத் தொடங்கவுள்ளார். தொடர்ந்து ஜனவரி 25, 2027 வரை சிம்ம ராசியில் பயணிக்கும் குரு பகவான், அதன்பின் வக்ர நிலையை அடைந்து மீண்டும் கடக ராசியை நோக்கி நகர்வார்.
இந்த குரு பெயர்ச்சி அனைத்து ராசிகளிலுமே மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி நிலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய யோகத்தையும் முன்னேற்றத்தையும் தரவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி கீழே விரிவாகக் காண்போம்.