சில ராசிக்காரர்களுக்கு கண் திருஷ்டி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஜோதிடத்தின்படி,5 ராசிக்காரர்கள் தங்கள் இயல்பாலேயே எளிதில் அடுத்தவர்களின் கெட்ட பார்வைக்கு ஆளாகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளைக் கொண்டு வரலாம்.
கண் திருஷ்டி ரொம்பவே மோசமானது. ஆனால், எல்லோருக்கும் இதன் பாதிப்பு ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு அதிக பாதிப்பு, சிலருக்கு குறைவு. துரதிர்ஷ்டவசமாக, 5 ராசிக்காரர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அந்த லிஸ்ட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
26
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்கள் எல்லோருடனும் சுலபமாகப் பழகுவார்கள். யார் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே, தங்கள் மனதிலிருப்பதை அப்படியே சொல்லிவிடுவார்கள். ரகசியங்களைக் கூட யோசிக்காமல் பகிர்ந்து கொள்வார்கள். இவர்களின் இந்த வெளிப்படையான குணமே, அடுத்தவர்களின் கண் திருஷ்டிக்கு அவர்களை ஆளாக்கிவிடுகிறது. எதிரிகளின் வலையில் சிக்கி இவர்கள் வாழ்க்கை பாதிப்படைகிறது.
36
கடக ராசி
கடக ராசிக்காரர்கள் புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள். யாராவது இவர்களைப் புகழ்ந்தால், உடனே உருகிவிடுவார்கள். உணர்ச்சிவசப்பட்டு, சரியான நபர்களை அடையாளம் காணத் தவறிவிடுவார்கள். இந்தக் காரணத்தினாலேயே, இவர்கள் எளிதாகக் கண் திருஷ்டி வலையில் விழுகிறார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் எல்லோருடைய கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என விரும்புவார்கள். தங்களைப் பற்றி தாங்களே பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். இவர்களுடைய இந்த குணம் பலருக்கும் பிடிக்காது. இதனால், இவர்களே தங்களுக்கு எதிரிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். இந்த குணமே இவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
56
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்கள் எளிதில் கெட்ட பார்வைக்கு ஆளாவார்கள். இவர்கள் தங்களைப் பற்றிப் பெரிதாக யாரிடமும் காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், இவர்களுடைய திறமையைப் பார்த்துப் பலரும் பொறாமைப்படுவார்கள். இதன் விளைவாக, விருச்சிக ராசிக்காரர்கள் மற்றவர்களின் கண் திருஷ்டிக்கு ஆளாகிறார்கள்.
66
மீன ராசி
மீன ராசிக்காரர்கள் மிகவும் உணர்திறன் மிக்கவர்கள். இவர்களுக்கு ஆன்மிக அறிவும் அதிகமாக இருக்கும். ஆனால், எந்த ஒரு கெட்ட சக்தியாலும் இவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள். இதனால், அடுத்தவர்களின் கண் திருஷ்டிக்கு இவர்கள் சுலபமாக ஆளாகிவிடுகிறார்கள்.