அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் சமநிலையான மனநிலையும், ஆழமான மன உறுதியும் கொண்டவர்கள். அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் உணர்ச்சிகளையும் மனநிலையையும் சமநிலைப்படுத்துவதில் கை தேர்ந்தவர்கள். இதன் காரணமாக எந்த ஒரு சவாலையும் திறம்பட எதிர்கொள்கின்றனர். தங்கள் மனதை இரும்புக் கோட்டையாக உருவாக்கி, புயலை தாங்கும் வலிமை கொண்டவர்கள். தங்களது தொழிலில் பெரிய மாற்றங்களை எதிர் கொண்டாலும் அதை அமைதியாக முடிவெடுத்து முன்னேறிச் செல்வர். இவர்களின் தைரியம் உண்மையை நிலை நாட்டுவதற்கும் தங்கள் நம்பிக்கைகளை பாதுகாப்பதற்கும் வெளிப்படுகிறது. இவர்கள் நியாயத்திற்காக தைரியமாக போராடுவர். ஒரு சமூகப் பிரச்சனைக்காக பொதுவெளியில் குரல் கொடுக்க இவர்கள் தயங்குவதில்லை.
(குறிப்பு: ஜனவரி, ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் அசுரமான வலிமையும், எல்லையற்ற தைரியமும் கொண்டவர்கள். இவர்களின் உறுதியும், தைரியமும் அவர்களை வாழ்க்கையில் பல சவால்களைக் கடந்து வெற்றிகரமாக முன்னேறிச் செல்ல உதவுகிறது. இந்த மாதங்களில் பிறந்தவர்கள் தங்கள் தனித்துவமான ஆளுமை மூலம் சமூகத்திற்கு முன்மாதிரியாகவும், உத்வேகமாகவும் திகழ்கிறார்கள். இந்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்களின் பெறப்பட்டவை மட்டுமே. இவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)