Things do Buy on Rama Navami : சைத்ர நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமி திதியில் ராம நவமி கொண்டாடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, ராம நவமி அன்று சில பொருட்களை வீட்டிற்கு வாங்கி வருவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இந்த வருடம் ராம நவமி பண்டிகை மார்ச் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் கொண்டாடப்படுது. இந்து புராணங்களின்படி, இந்த நாளில்தான் ராமர் பிறந்தார். அதனால்தான் இந்த ராம நவமி என அழைக்கிறோம். இந்த நாளில் சில பொருட்களை வீட்டுக்கு கொண்டு வருவது மிகவும் மங்களகரமானது. அவ்வாறு செய்தால், ராமர் அருள் மட்டுமில்ல, லட்சுமி தேவியின் அருளும் கிடைக்கும். அந்த பொருட்கள் என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
25
மஞ்சள் நிறப் பொருட்கள்
ராம நவமி அன்று மஞ்சள் நிறப் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வருவது மிகவும் சுபமானதாக கருதப்படுகிறது. மஞ்சள் நிற ஆடைகள், சந்தனம், தங்கம் அல்லது இனிப்புகள் என எதை வேண்டுமானாலும் வாங்கலாம். ஏனென்றால் ஸ்ரீ ராமருக்கு மஞ்சள் நிறம் என்றாலே மிகவும் பிடிக்குமாம்.
35
வெள்ளி பொருட்கள்
ராம நவமி அன்று வெள்ளிப் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வருவது ரொம்ப மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் நீங்க ஒரு வெள்ளிப் பொருட்களை வாங்கினால், அது உங்க மதிப்பையும் மரியாதையையும் அதிகரிக்கும். கூடவே, ஸ்ரீ ராமர் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதுமே இருக்கும்.
ஜோதிட சாஸ்திரப்படி, ராம நவமி நாளில் பூஜை தொடர்பான பொருட்களை வீட்டுக்கு கொண்டு வருவது நல்லது. இந்த நாளில் மாமரக் கட்டைகள், சந்தனம், பசு நெய், அரச இலைகள், 'பஞ்சமேவா' (ஐந்து உலர் பழங்களின் கலவை), எள், கிராம்பு, ஏலக்காய், பார்லி போன்ற பொருட்களை வீட்டுக்கு வாங்கி வரலாம்.
55
ராம தர்பார் புகைப்படம்
ராம நவமி அன்று, வீட்டுப் பூஜை அறையில் ராம தர்பார் படத்தை வைப்பது குடும்பத்தில் அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும். இந்த நல்ல நாளில், ஒரு ராம தர்பார் படத்தை வீட்டுக்கு வாங்கி வந்து, முறைப்படி பூஜை அறையில் வையுங்கள். இப்படிச் செய்வதால் குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)